/* */

தேனி மாவட்டத்தில் 3வது முறையாக ஜீரோ தொற்று: மாவட்ட சுகாதாரத்துறை நிம்மதி

தேனி மாவட்டத்தில் இன்று மூன்றாவது முறையாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 3வது முறையாக ஜீரோ தொற்று: மாவட்ட சுகாதாரத்துறை நிம்மதி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் இன்று மூன்றாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் சராசரியா 900 முதல் 1200 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் தினமும் காலையில் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் மூலம் வெளியாகும்.

இந்த மாதத்தில் மட்டும் இதற்கு முன்னர் இரண்டு நாள் கொரோனா தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை என அறிவிக்கப்பட்டது. இன்றும் மூன்றாவது முறையாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேனி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் யாராவது கொரோனா பரிசோதனை செய்திருந்து அவர்களுக்கு பாசிட்டிவ் என முடிவு வெளிவந்தால், அவர்கள் நேரடியாக தமிழக சுகாதாரத்துறைக்கு தெரிவிப்பார்கள். அந்த கணக்கு அரசு வெளியிடும் மீடியா புல்லட்டின் அறிக்கையில் வெளியாகும்.

எப்படி இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களாகவே ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு மூன்றாவது முறையாக சைபரை தொட்டுள்ளது ஆறுதலாக உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 Oct 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி