/* */

வைகையில் வெள்ள அபாயம் குறைந்தது; இன்று 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

வைகை ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்துள்ளது.

HIGHLIGHTS

வைகையில் வெள்ள அபாயம் குறைந்தது;   இன்று 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
X
வைகை அணை- கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வைகை அணையில், அதிக நீர் வரத்து இருந்தது. அணை நிரம்பியதால் வரும் தண்ணீர் முழுக்க ஆற்றில் திறக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியை தாண்டியது. வைகை ஆற்றில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் வெள்ளப்பெருக்கு இருந்ததால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை குறைவால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இன்று காலை நிலரவரப்படி, அணைக்கு விநாடிக்கு, 3100 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், வைகை ஆற்றில் வெள்ள அபாயம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் தற்போதும் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  2. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  3. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  5. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  6. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  7. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  8. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  9. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  10. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?