Begin typing your search above and press return to search.
தேனி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு: 15,450 பேருக்கு தடுப்பூசி
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனைகளின் படி 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தில் இன்று இரண்டு பேருக்கு மட்டுமோ கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.
தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, இன்று தேனி மாவட்டத்தில் ஒருவருக்கும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஆக 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாவட்டத்தில் 90 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 15 ஆயிரத்து 450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.