/* */

கடன் தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் மனு

தேனி மாவட்டத்தில் கடன் தருவதாக கூறி மைக்ரோ பைனான்ஸ் நடத்தி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்

HIGHLIGHTS

கடன் தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி:   பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் மனு
X

தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்ய வந்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள்

தேனியில் கடன் தருவதாக கூறி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக 54 பேர் தேனி எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தேனி அன்னஞ்சி, ஆண்டிபட்டி, உத்தமபாளையத்தில் மைக்ரோ பைனான்ஸ் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பைனான்சில் கடன் வழங்க ஆள் சேர்ப்பது, கடனை வசூலிப்பது போன்ற பணிகளுக்கு 54 பேர் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.

இவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்க 5 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். ஆட்களை பிடித்து வாருங்கள். உங்களுக்கு நீங்கள் கடன் வழங்க ஆள் சேர்க்கும் வீதத்திற்கு தகுந்தபடி ஊக்கத்தொகை, மாதாந்திர சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இவர்கள் 54 பேரும் கடந்த 20 நாட்களில் பலரை சேர்த்து 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்து கொடுத்துள்ளனர். இந்த பணத்துடன் மைக்ரோ பைனான்ஸை மூடி விட்டு அதன் நிர்வாகிகள் தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில், இந்த 54 பேரும், மக்களிடம் கடன் தருவதாக தாங்கள் வாங்கிய முன்பணத்தை கேட்டு மக்கள் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர் எனக்கூறி, தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் எம்.பி.எஸ்.முருகன் தலைமையில் இன்று தேனி எஸ்.பி.யிடம் முறையிட்டனர். மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. தெரிவித்தார்.

Updated On: 14 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  2. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  4. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  5. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  6. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  7. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  8. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  9. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...