Begin typing your search above and press return to search.
ஆண்டிபட்டி அருகே அதிகாலையில் ஆட்டோவில் மதுபாட்டில் கடத்தியவர்கள் கைது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்த ஆட்டோவை மறித்து கண்டமனுார் போலீசார் சோதனை செய்தனர். ஆட்டோவில் அனுமதியின்றி விற்பனை செய்ய வாங்கிச் சென்ற 450 மதுபாட்டில்கள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் பாட்டில் கடத்திய அம்மாபட்டியை சேர்ந்த போத்திராஜ்( 32 )மற்றும் தெப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன்( 30 )ஆகியோரை கைது செய்தனர்.