/* */

தேனி மாவட்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கிராம ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட 35 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. எப்போதுமே தேனி மாவட்டம் மழை மறைவு பிரதேசம் என்பதால், தென்மேற்கு பருவமழை குறைவாகவும், வடகிழக்கு பருவமழை தேவையான அளவும் பெய்யும். இந்த ஆண்டு வழக்கத்தை விட தென்மேற்கு பருவமழை குறைந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது. தற்போது தொடங்கி உள்ள பருவமழை, வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்கும். எனவே நான்கு மாதம் தொடர்ச்சியாக மழைக்காலம் என்பதால், இப்போது நடவு செய்யும் கன்றுகள், நான்கு மாதத்தில் ஓரளவு வளர்ந்து விடும்.

எனவே, மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்படி, தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கிராம ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும், 130 கிராம ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Updated On: 8 Oct 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!