/* */

பேருந்தில் தவறிய மணிபர்ஸ் - பேருதவி செய்த பெண்; பாேலீசார் பாராட்டு

பஸ்சில் ஒரு பெண் பணத்துடன் தவற விட்ட மணிபர்ஸை எடுத்த மற்றொரு பெண், அதனை போலீசார் மூலம் அந்த பெண்ணிடம் சேர்த்தார்.

HIGHLIGHTS

பேருந்தில் தவறிய மணிபர்ஸ் - பேருதவி செய்த பெண்; பாேலீசார் பாராட்டு
X

பஸ்சில் போடியை சேர்ந்த பெண் தவற விட்ட பணத்தை வருஷநாடு எஸ்.ஐ., அருண்பாண்டி அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.

தேனி மாவட்டம், வாலிப்பாறைக்கு சென்ற அரசு பஸ்சில் போடியை சேர்ந்த பெண் தவற விட்ட மணிபர்ஸை எடுத்த கிராமத்து பெண் வனிதா அதனை பத்திரமாக போலீசிடம் ஒப்படைத்து உரியவர்களிடம் சேர்த்தார்.

போடியை சேர்ந்த பாண்டி என்பவர் மனைவி லட்சுமி தேனியில் இருந்து வாலிப்பாறை செல்லும் பஸ்சில் ஏறி கடமலைக்குண்டு என்ற கிராமத்திற்கு சென்றார். அப்போது தனது மணிபர்ஸ்சை 4500 ரூபாய் பணத்துடன் தவற விட்டார்.

இந்த பர்ஸ் தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு மனைவி வனிதா என்பவரிடம் சிக்கியது. அவர் அதனை பத்திரமாக கொண்டு சென்று வருஷநாடு எஸ்.ஐ., அருண்பாண்டியிடம் ஒப்படைத்தார்.

அருண்பாண்டியன் விசாரணை நடத்தி பர்ஸ்க்கு உரிய நபரை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் பர்ஸை ஒப்படைத்தார். பணத்திற்கு ஆசைப்படாமல், ஒப்படைத்த கிராமத்து மனிதநேயத்தை நிரூபித்த வனிதாவை போலீசார் பாராட்டினர்.

Updated On: 24 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  8. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  10. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...