/* */

போலி பட்டா வாங்கித் தருவதாக 70 லட்சம் மோசடி: 15 பேர் மீது வழக்கு பதிவு

போலி பட்டா வாங்கித்தருவதாக 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த சார்பதிவாளர், இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு.

HIGHLIGHTS

போலி பட்டா வாங்கித் தருவதாக 70 லட்சம் மோசடி: 15 பேர் மீது வழக்கு பதிவு
X
பைல் படம்

அரசு இடத்திற்கு போலி பட்டா வாங்கித்தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தாசில்தார், சார்பதிவாளர், கலெக்டர் அலுவலக உதவியாளர், இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்ய ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மனைவி உமாமகேஷ்வரி, 43. இவரிடம் சின்னமனுாரை சேர்ந்த புரோக்கர் ராஜா என்பவர், 2018ம் ஆண்டு அரசு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித்தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை வாங்கி உள்ளார். போலி பட்டா தயார் செய்து கொடுத்துள்ளனர். நிலத்தை பதிவு செய்யவில்லை.

இது குறித்து உமாமகேஷ்வரி, புரோக்கர் ராஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து தன்னை ஏமாற்றியதாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், ஆண்டிபட்டி துணை தாசில்தார், சார்-பதிவாளர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேர் புகார் செய்து ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் மகேந்திரவர்மா புகாருக்கு உட்பட்ட 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, முழுமையான விசாரணை நடத்துமாறு ஆண்டிபட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Updated On: 18 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு