/* */

வைகை அணையில் துார்வாரும் பணிகள்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைகை அணை துார்வாரப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதும் துார்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

HIGHLIGHTS

தேனி மாவட்டம், வைகை அணையினை துார்வாருவது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி மாவட்டம், வைகை அணை நீர்மட்டம் 71 அடி ஆகும். இதில் 21 உயரம் வரை வண்டல் மண்ணும் சேறும் சேர்ந்துள்ளது. எனவே, நீர்மட்ட உயரம் 71 அடி வரை இருந்தாலும், அணையில் நீர் இருப்பு 51 அடியாகத்தான் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைகை அணையை துார்வார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், வைகை அணை உட்பட சில அணைகளை துார்வார நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, வைகை அணையை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் கிருஷ்ணன், வைகை பெரியாறு கோட்டசெயற்பொறியாளர் சுகுமாறன், உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர்கள் ரித்திகா, மீனாட்சி, பொறியாளர்கள் குபேந்திரன், ஆனந்தன் உட்பட அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர். மதகு பகுதி, மதகில் நீர் திறந்து விடும் பகுதி, நீர் மட்டத்தை குறிக்கும் கருவியின் செயல்பாடுகள், மழைமாணி, சுரங்கப்பாதை, கசிவுநீர், 58-ஆம் கால்வாய் பகுதிகளை ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அணையில் இருந்து விநாடிக்கு 64 ஆயிரம் கனஅடி தண்ணீரை 14 மதகுகள் வழியே திறந்து விடுவது குறித்தும் ஆலோசனை செய்தனர்.

Updated On: 30 Sep 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு