/* */

என்னது..? எலுமிச்சை பழம் ஒன்று 20 ரூபாயா..? அப்ப..வெயிலுக்கு ஜூஸ்..புஸ்ஸா..?

தேனி மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் கிலோ 250 ரூபாயினை எட்டி உள்ளது. சில்லரையில் ஒரு பழம் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

HIGHLIGHTS

என்னது..? எலுமிச்சை பழம் ஒன்று 20 ரூபாயா..? அப்ப..வெயிலுக்கு ஜூஸ்..புஸ்ஸா..?
X

எலுமிச்சை (மாதிரி படம்)

தேனி மாவட்டத்திலும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் அனைத்து பழங்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் அனைவரும் எலுமிச்சை பழம் வாங்கி ஜூஸ் போட்டு விரும்பி சாப்பிடுவது வழக்கம். எலுமிச்சை பழம் விலை சில்லரை மார்க்கெட்டில் கிலோ 250 ரூபாயினை எட்டி உள்ளது. மொத்த மார்க்கெட் விலையே 200 ரூபாயினை எட்டியுள்ளது. தனியாக தரமான ஒரு பழம் வாங்கினால் 20 ரூபாய் வரை விலை கொடுக்க வேண்டி உள்ளது.

இதேபோல் மாம்பழம் விலை கிலோ 240 ரூபாய், சப்போட்டா 140 ரூபாய், திராட்சை 160 ரூபாய், மாதுளை பழம் 200 ரூபாய், ஆப்பிள் கிலோ 240 ரூபாய் வரை விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலைகளும் சற்று உயர்ந்துள்ளன. தக்காளி கிலோ 50 ரூபாய், சின்னவெங்காயம் கிலோ 25 ரூபாய், பெல்லாரி 25 ரூபாய் என விற்கப்படுகிறது. பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் 40 ரூபாயினை கடந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, தற்போது காய்கறிகளின் விலை சராசரியாக கிலோவிற்கு 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 1 May 2022 6:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!