/* */

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி
X

பைல் படம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மழைக்கால தொற்று நோய்களான டெங்கு, எலிக்காய்ச்சல், கொரோனா தொற்று, சிக்குன்குனியா காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, கருணாபுரம் ஊராட்சிகளில் தக்காளி காய்ச்சலும் பரவி வருகிறது.

நெங்கண்டம் அருகே கல்லாறு அரசு தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிக்கும் 20 மாணவ, மாணவிகளுக்கு உடலில் கொப்புளம், அரிப்பு, காய்ச்சல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியரின் அழைப்பினை ஏற்று பள்ளிக்கு சென்ற மருத்துவக்குழு மாணவர்களை பரிசோதித்து தக்காளி காய்ச்சலை உறுதிப்படுத்தியது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து தேனி மாவட்ட எல்லைகளில் சுகாதார எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Updated On: 30 Jun 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்