/* */

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் முற்றுகை

தேனியில் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் முற்றுகை
X

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் விற்பனையாகும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க வேண்டும், உரிய விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் அனைத்துக் கடைகளிலும் விலைப்பட்டியல் இடம்பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தேனியில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததை கண்டித்து இன்று தேனி நகர அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமையிலானோர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளார், கண்காணிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும் கடை அனுமதி எண் பலகை, சிசிடிவி கண்காணிப்பு கேமிரா மற்றும் விற்பனை ரசீது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி நகர் காவல்துறையினர் டாஸ்மாக் அலுவலர்கள் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் கடையின் முன் விலைப்பட்டியல் வைக்கப்பட்டு, பெயர்ப்பலகையும் மாட்டப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 14 Feb 2021 6:26 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்