/* */

தேனியில் சாலை மறியல் - 144 பேர் கைது

தேனியில் சாலை மறியல் - 144 பேர் கைது
X

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை மறியலில் 144பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 5வது நாளாக இன்றும் தேனியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட துணைதலைவர் முத்தையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முன்பாக ஒருங்கிணைந்த அரசு ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 92பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் தேனி நேரு சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்ட 31நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியிலும் சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் கூடிய காங்கிரசார் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளுக்கு இடையூறாக அமர்ந்து மறியல் செய்தனர்.‌ இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மறியலில் ஈடுபட்ட 21நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இதனால் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை மறியலில் 144பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 6 Feb 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!