/* */

கொத்தடிமைகளாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கொத்தடிமைகளாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
X

தேனி மாவட்டம் சின்னமனூரில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள உணவகங்கள், ஜவுளிக்கடை மற்றும் கனரக தொழிற்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் நலக்குழுவினர்நடத்திய ஆய்வில் ஒரு சிறுமி உள்பட, 6 சிறார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டன. அவர்களை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் தலைமையில், சைல்டு லைன், சமூக நலம், தொழிலாளர் நலம் மற்றும் காவல்துறையினர் மீட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், 17 வயதுக்கு மேற்பட்ட இரண்டு சிறார்கள் கனரக தொழிற்கூடங்களிலும், 17வயது சிறுமி ஒருவர் பலசரக்கு கடையிலும், மற்றும் பிற கடைகளில் 14 வயதிற்கு கீழ் உள்ள 4 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறார்களை பணியமர்த்திய உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் கல்வி தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.

Updated On: 3 Feb 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?