Begin typing your search above and press return to search.
தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தேனியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் 830 மையங்களில் 1,02,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
தேனி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். காலை 7மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்த முகாம் நடைபெறுகிறது.இந்நிகழ்வில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.