/* */

மேகமலை வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம்

மேகமலை வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் எதிரொலி, காலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் சென்று மாலை 6 மணிக்குள் கீழே இறங்க வனத்துறை உத்தரவு.

HIGHLIGHTS

மேகமலை வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம்
X

தேனி மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான மேகமலை பகுதியில் காட்டு யானைகள் புலி, சிங்கம், சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான்கள், கருங்குரங்கு போன்ற வனவிலங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன. மேகமலைப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் மேகமலைக்கு சென்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மேகமலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் மற்றும் நாள்தோறும் சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மீண்டும் மேகமலை பகுதிக்கு திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் மேகமலை பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சாலையிலேயே உலா வருகின்றன. இதனால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மேகமலைக்கு செல்வதற்கு அடிவாரப் பகுதியான தென்பழனி வனசோதனைச் சாவடியில் இருந்து காலை 6 மணி முதல் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் . மேலே செல்லும் வாகனங்கள் மாலை 5 மணிக்கு புறப்பட்டு 6 மணிக்குள்ளாக கீழே இறங்கி தென்பழனி வனசோதனை சாவடியை கடந்து சென்று விட வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி மேகமலை பகுதியில் வாகனங்கள் ஆறு மணிக்கு மேலாக இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Dec 2020 4:54 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...