/* */

திருவிடைமருதூரில் பூட்டியிருந்த வெள்ளி நகைகடையில் பொருட்கள் திருட்டு

கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் ஓட்டை போடப்பட்டு வெள்ளி நகைகள் திருடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திருவிடைமருதூரில் பூட்டியிருந்த வெள்ளி நகைகடையில்  பொருட்கள் திருட்டு
X

திருவிடைமருதூரில் பூட்டியிருந்த வெள்ளி நகைகடையில் வெள்ளி பொருட்கள் திருட்டு

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வடக்கு வீதியில் வசித்து வருபவர் பிலால் அகமது திவான் மகன் ஃபைசல் அகமது (39). இவர் தனது வீட்டிற்கு எதிரே மதினா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடையில் வெள்ளி பொருட்கள் மட்டும் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் நகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் ஓட்டை போடப்பட்டு நகைகள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காணொளியில், நள்ளிரவில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  8. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  9. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!