/* */

வங்கி ஏடிஎம் மையங்களில் நூதன மோசடி: மூன்று இளைஞர்கள் கைது

ஏடிஎம் மையங்களில் முதியவர்கள் மற்றும் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு உதவுவது போல் நடித்து மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்

HIGHLIGHTS

வங்கி ஏடிஎம் மையங்களில் நூதன மோசடி: மூன்று இளைஞர்கள் கைது
X

தஞ்சை மாவட்டத்தில்  ஏடிஎம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மூவர்.

வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுவது போல் நடித்து கூடுதலாக பணம் எடுத்து ஏமாற்றிய, மூன்று நபர்களை திருவிடைமருதூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து இவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 17 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்.

கடந்த சில நாட்களாக கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை, சோழபுரம், திருவிடைமருதூர் பாபநாசம் போன்ற பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் முதியவர்கள் மற்றும் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு பணம் எடுத்து கொடுத்து உதவுவது போல் நடித்து, மோசடி செய்து வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் ரவிளிபிரியாவிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றி வேந்தன் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் காமராஜ் காவலர்கள் தேவேந்திரன், கவியரசன், விக்னேஷ் ஆகியோர், ஆடுதுறை பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் மோசடியில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களை, திருவிடைமருதூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்தமூவரும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த சிவநாதன் மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பீட்டர் என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 17 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தப் பணம் பல்வேறு நபர்களிடம் ஏமாற்றிய பணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அண்மையில் சோழபுரம் பகுதியில் 52 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டது. அந்த கண்காணிப்பு கேமராவில் இந்த மோசடி நபர்கள் கைவரிசை காட்டியது பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் இவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

Updated On: 30 Sep 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  2. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  3. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு