/* */

தஞ்சை: ஆவணியாபுரத்தில் புதிய பாலம் அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் ஆவணியாபுரத்தில் புதிய பாலம் அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை: ஆவணியாபுரத்தில் புதிய பாலம் அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை
X

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை - மஞ்சள்மல்லி செல்லும் சாலையில், ஆவணியாபுரத்தில் உள்ள செட்டிகுளத்துக்கு செல்லும் வடிகால் வாய்க்கால் பாலம், பல ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள், பொது மக்கள் தினந்தோறும் சிரமப்பட்டு சென்று வந்தனர். இப்பகுதியில் புதியதாக பாலத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள், ஆவணியாபுரம் செட்டிகுளம் பாலத்தில் சிமெண்டினாலான குழாயை அமைக்க வந்தனர். இதனையறிந்த ஆவணியாபுரத்தை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆடுதுறை கிளை தலைவர் முஹம்மது அனஸ், கிளை செயலாளர் ஹிலால் அஹமத், கிளை பொருளாளர் ஜெஹபர் அலி, தஞ்சை வடக்கு மாவட்டபொருளாளர் மன்சூர் அலி, தஞ்சை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி வரிசை முஹம்மது மற்றும் பொதுமக்கள், சிமெண்ட் கட்டிடத்தை கட்டி தரவேண்டும், தரமற்ற குழாயினை பயன்படுத்தக்கூடாது, மழை காலத்தில் மீண்டும் பாலம் சேதமடையும் என குழாய் அமைக்கும் பணியினை மறித்தனர்.

இது குறித்து தகவலறிந்த திருநீலக்குடி போலீஸார், நிகழ்விடத்துக்கு சென்று நடத்திய பேச்சு வார்த்தையில், செட்டிகுளம் வாய்க்காலில் சிமெண்டிலான பாலம் கட்டித்தர வேண்டும் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில் குழாயினை அமைக்க வந்த திருவிடைமருதூர் நெடுஞ்சாலைதுறை ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள் திரும்பி சென்றனர்.

Updated On: 13 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!