Begin typing your search above and press return to search.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 645 பேருக்கு கொரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 7,80,303 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 57,220 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50,526 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 6,076 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 621 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.