Begin typing your search above and press return to search.
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தஞ்சை கோரிக்குளம் புதுதெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (36). இவர் விளாரில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது விளார் மேற்கு தெருவை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் கார்த்திகேயன் (28) ஓட்டி வந்த பைக், பிரபாகரன் பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் இறந்தார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் கார்த்திகேயனின் மனைவி லட்சுமி புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்