Begin typing your search above and press return to search.
தஞ்சை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு இலக்கு
தஞ்சை மாவட்டத்தில் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 14 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஆறாவது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதனையொட்டி, மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, திருவிடைமருதூர், பாபநாசம் என எட்டு தாலுக்காக்களில், 850 சிறப்பு மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதில், ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு துவங்கிய முகாமில், பொதுமக்கள் காலை முதலே, நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.