/* */

தஞ்சையில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

கொரோனா 3 வது அலை வந்தாலும் சிகிச்சை அளித்திட கூடுதலாக 1000 புதிய படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.

HIGHLIGHTS

தஞ்சையில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்
X

தஞ்சையில் சிறப்பு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.

தஞ்சையில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. பொது மக்களுடன் அதிகம் தொடர்புடன் உள்ள வணிகர்களுக்கென்று சிறப்பு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை துவங்கியுள்ளோம். நேற்று 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மாவட்டம் முழுவதிலும், இதுவரை 5 லட்சத்தி 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் கட்ட தடுப்பூசி 4 லட்சத்தி 30 ஆயிரம் பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 85 ஆயிரம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. 3 வது அலை வந்தாலும் சிகிச்சை அளித்திட முன்னேற்பாடாக 1000 புதிய படுக்கைகள் தயாராக வைத்துள்ளோம். ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.


Updated On: 21 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  2. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  3. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  5. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  7. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  10. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்