தஞ்சாவூரில் வரிகளை இணைய தளம் மூலம் செலுத்துங்கள், மாநகராட்சி வேண்டுகோள்
தஞ்சாவூரில் வரிகளை இணைய தளம் வழியாக செலுத்துங்கள் என்று மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
HIGHLIGHTS
கொரோனா பரவல் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக பல்வேறு தளர்களுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசு அலுவல்களில் 50% ஊழியர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் கூடுவதற்கும் தடை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை இணையதளம் மூலம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சியில் 2021 -2022 அரையாண்டிற்கான சொத்து வரி, காலிமனை வரி தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பயன்பாட்டுக் கட்டணம்,
தொழில் உரிமம் கட்டணங்களை https://tnurbanepay.tn.gov.in இணையதளம் வழியாக செலுத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வரி செலுத்த மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிடையாக வருவதை தவிர்த்து தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையினை https://tnurbanepay,tn.gov.in என்ற இணையதளம் மூலம் செலுத்த வேண்டுகோள்.