/* */

மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழுவுக்கு தையல் பயிற்சி: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தையல் பயிற்சி முடித்த பின் நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழுவுக்கு தையல் பயிற்சி: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், புனவாசல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் இளந்தென்றல் மாற்றுத்திறனாளி சிறப்பு குழுவில் உள்ள 12 மாற்றுத்திறனாளி குழு உறுப்பினர்களின் கோரிக்கையினை பரிசீலித்து மாற்றுத்திறனாளி குழு உறுப்பினர்கள் நலனை கருத்திற் கொண்டு அவர்கள் வசிக்கும் புனவாசல் ஊராட்சியிலேயே தஞ்சாவூர் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் கிராம சேவை மையத்தில் 30 நாட்கள் தையல் பயற்சிஅளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், 12 புதிய தையல் இயந்திரங்கள் மாற்று திறனாளிகளுக்கு வாங்க ஏதுவாக கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு புதிய தையல் இயந்திரம் பெறப்படவுள்ளது. மேலும்,அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தையல் பயிற்சி முடித்தபின் நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தரும் பொருட்டு தஞ்சாவூர் மகாராஜா சில்ஸ் நிறுவனம் மூலம் மாற்று திறனாளிகளுக்கு துணிகளை வழங்கி ஆயத்த ஆடைகளாக உருவாக்கி மீளபெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்தார்

Updated On: 13 May 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?