கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரிக்கை

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 11 இந்து அறநிலையஆலயங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரிக்கை
X

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்

கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க, தமிழ்நாடு அரசு உயர் மட்ட குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 11 இந்து அறநிலையத்துறை ஆலயங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் சங்கத்தின் மாநில தலைவர் வி.சு. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.சிவபுண்ணியம், தமிழ்நாடு விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வி.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கோவில் மனை குடியிருப்பு சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ஏழுமலை நன்றி கூறினார் .

கூட்டத்தில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் மனைகளில் பல்லாண்டு காலமாக குடியிருந்து வருபவர்கள் கோவிலுக்குரிய இடத்தின் அடிமனைக்கு ஆண்டுதோறும் வரி செலுத்தி வந்துள்ளனர், மேலும் தண்ணீர் வரி, சொத்து வரி , மின் கட்டணம் முதற் கொண்டு செலுத்தி வருகின்றனர். இந் நிலையில் அறநிலையத் துறை அதிகாரிகள் குடியிருந்து வரும் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றும், பூட்டி சீல் வைக்கும் அடாவடித் தனத்தையும் செய்து‌ அரசிற்கு அவப் பெயரை ஏற்படுத்துகின்றனர்.

கோவில் மனைகளில் பல்லாண்டுகளாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா வழங்க வேண்டி நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களை, இயக்கங்களை நடத்தி வந்துள்ளனர் . இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மக்கள் வசிக்கும் இடங்களை ஆக்கிரமித்தும், வீடுகளை விட்டு வெளியேற்றுவது , பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கை விட வேண்டும் தமிழ்நாடு முதல்வர், அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது நாள் வரை இப்பிரச்னைகளில் தீர்வு காணப்படவில்லை.

எனவே தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா கிடைக்க தமிழ்நாடு அரசு டிரிப்யூனல் அல்லது உயர் மட்ட குழு ஒன்றை அமைத்து, உண்மைகளை கண்டறிந்து அந்த மக்களுக்கு நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி, வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி இந்து அறநிலையத் துறை ஆலயங்கள் , கோவில்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தமிழ்நாடு முழுவதும் கோவில் நுழைவாயில்கள் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டு மெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Updated On: 25 March 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கொள்ளையின் போது சுடப்பட்ட நாய் 3 அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
  3. தொழில்நுட்பம்
    புதிய ரியாலிட்டி ஹெட்செட் ‘விஷன் ப்ரோ’: ஆப்பிள் நிறுவனம் அறிமுகம்
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத் தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
  5. நாமக்கல்
    தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 52 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர்...
  6. சினிமா
    இந்த உடையில் யாரு சூப்பர்? அதிதி ராவ் ஹிடாரி Vs ராஷ்மிகா மந்தனா!
  7. தமிழ்நாடு
    டெல்டா பாசனம்: ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்...
  8. நாமக்கல்
    வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  9. நத்தம்
    திண்டுக்கல்லில் புகார் பதிவு மையம்: அமைச்சர் பெரியசாமி திறப்பு
  10. விளையாட்டு
    காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் ஆடிய வெங்கடேஷ் ஐயர்! வைரலாகும் வீடியோ!