/* */

தஞ்சையில் தேர்வு மையத்தில் மின்வெட்டு: மாணவர்கள் அவதி

தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் இல்லாதததால் மாணவர்கள் அவதியுற்றனர்

HIGHLIGHTS

தஞ்சையில் தேர்வு மையத்தில் மின்வெட்டு: மாணவர்கள் அவதி
X

மின் தடையால் போதிய வெளிச்சமின்றி தேர்வெழுதிய மாணவர்கள். 

தமிழகத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு 107 மையங்களில் நடக்கிறது. 225 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 235 மாணவர்களும், 15 ஆயிரத்து 195 மாணவிகளும். மேலும் 604 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களுக்காக மூன்று தனி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 29 ஆயிரத்து 34 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களில் 162 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவர். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க 206 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 533 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சை, அரசர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் தடை பட்டது. இதனால், மாணவர்கள் அவதியுற்றனர். பின்னர் உடனடியாக பள்ளி நிர்வாகம் மின் கோளாறை சரி செய்து மின் இணைப்பு வழங்கினர். இங்கு மட்டும் 392 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 May 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்