Begin typing your search above and press return to search.
தஞ்சை அருகே சாலையை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி வேன் மோதி பலி
தஞ்சை அருகே சாலையை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி வேன் மோதி பலியானார்.
HIGHLIGHTS
தஞ்சை வெண்ணாற்றங்கரை சுங்கான் திடல் பெரிய தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மதன் ராஜ் (29) . கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக பால் ஏற்றி வந்த மினி லாரி எதிர்பாரதவிதமாக மதன்ராஜ் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மதன்ராஜ் பலத்த காயமடைந்தார். உடன் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதன்ராஜ் இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.