/* */

தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
X

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என மாவட்டம் முழுவதும் 117 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு, தடுப்பூசி கையிருப்பை பொறுத்து சிறப்பு மையங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால், மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மையங்குளிலும், இன்று தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவாதாகவும், மீண்டும் மாநகராட்சிக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்த பின்னர், முகாம் நடைபெறும் என்று, தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 19 July 2021 3:18 AM GMT

Related News