மையத்தில் சென்றால் விபத்து தான் ஏற்படும் : கமல் குறித்து முத்தரசன் கருத்து
கமல்ஹாசன் மையத்தில் சென்றால் விபத்து தான் ஏற்படும் என என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் இன்று செய்தியாளர்ளை சந்தித்தார் அப்போது பேசிய அவர் விவசாயிகளின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, மூன்று சட்டங்களை ரத்து செய்யாமல், போராடுபவர்களை பிளவு செய்ய மத்த அரசு முயற்சி செய்கிறது. இதனை கண்டித்து வருகிற 29 ஆம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கம் கலந்து கொள்ளளும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெறவுள்ளது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால், தடையை மீறி கூட்டமும் பேரணி நடைபெறும்.
உலகில் வலது சாரி, இடது சாரி கொள்கைகள் தான் உள்ளது. ஆனால் கமல் இடதும், வலதும் செல்லாமல் மையத்தில் தான் செல்வேன் என்று சொல்கிறார். அப்படி சென்றால் விபத்து தான் ஏற்படும். வகுப்புவாத கட்சியான பாஜக மற்றும் அதனுடன் சேரும் கட்சிகளை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள். மத்திய அரசை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் மனசாட்சிக்கு விரோதமாக வேளாண்மை சட்டங்களை தமிழக முதலமைச்சர் ஆதரிக்கிறார், மனசாட்சி படி நடந்தால் மற்ற மாநில முதல்வர்களை போல் வேளாண் சட்டத்தை ஆதரிக்க மாட்டார் என முத்தரசன் தெரிவித்தார்.