/* */

கானும் பொங்கல்: வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

கானும் பொங்கல் ஆன இன்று சுற்றுலா தலமான பெரிய கோயில், ராஜராஜன் மணி மண்டபம் ஆகிய இடங்கள் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

HIGHLIGHTS

கானும் பொங்கல்: வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்
X

வெறிச்சோடி காணப்படும் தஞ்சை பெரிய கோயில்.

கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்திருந்தது. பொங்கல் முடிந்து காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதிக சுற்றுலா தலங்கள் இருக்கும் தஞ்சையில் பொதுவாக காணும் பொங்கல் அன்று பெரிய கோயில், மணி மண்டபம், சரஸ்வதி நூலகம், அரண்மனை என பல்வேறு பகுதிகளில் உள்ளூர் முதல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள். முழுஊரடங்கு என்பதால் பிரதான சாலைகள் அனைத்தும் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு, பெரிய கோயில், மணி மண்டபம், அரண்மனை என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காட்சியளிக்கிறது. மேலும் தஞ்சையின் முக்கிய பகுதிகளில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வெளியே அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 7:00 AM GMT

Related News