/* */

தஞ்சையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி

Innovative training for veterinary assistants doctors in Tanjore

HIGHLIGHTS

தஞ்சையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பினை கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசு துறைகளில் கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாராம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. 20 ஆவது கால்நடை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 1 கோடி பசுவினங்களும். 5 இலட்சம் எருமையினங்களும், 1,43 கோடி செம்மறி மற்றும் வெள்ளாட்டினங்களும், 13 கோடி கோழியினங்களும் உள்ளன. கிராமப்புற ஏழை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி கிராமிய பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடை பராமரிப்புத்துறை மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது.

தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக் கோழிகள் கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதின் மூலம் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும். கிராமிய பொருளாதாரத்தை உயர்த்தவும் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு சுமார் 41 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் தற்போது 3030 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் இந்த பணியிடங்களில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பபடாமல் இருந்த நிலையில் தமிழக முதல்வர் வழிகாட்டுதலாலும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் தொடர் முயற்சியிலும் அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு, 1089 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை வகைப்படுத்தி துறையின் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கும் புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர். திருவாரூர். நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 141 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது என்று அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி.சு.ஜவஹர் தெரிவித்தார்

Updated On: 24 Jun 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்