/* */

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம்

இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் தயாரித்த இயந்திரம் மூலம் தேங்காயிலிருந்து நீர் பிரித்தெடுக்கப்படுகிறது

HIGHLIGHTS

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம்
X

 நாட்டில் முதலாவதாக  பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தஞ்சை மாரியம்மன் கோயிலில் மத்திய இணையமைச்சர் பிரகலாத் சிங்  தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் முதல்முறையாக பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கம் திட்டத்தை தஞ்சாவூரில் மத்திய இணையமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஜல்சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டேல் 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தஞ்சை வந்தடைந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தஞ்சை மாரியம்மன் கோயிலில் தொடங்கி வைத்தார். இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் சார்பில் பிரத்தியேக இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம், தேங்காயில் இருந்து நீர் பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் ஆகும். இந்தியாவில் முதல்முறையாக இந்தத் திட்டத்தினை இன்று இணையமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு புகழ்பெற்ற கோயில்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

Updated On: 29 Sep 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே ...
  2. திருவண்ணாமலை
    வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழா துவக்கம்: நாளை சீதாராம திருக்கல்யயாண...
  4. தொண்டாமுத்தூர்
    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: பாஜக நிர்வாகியிடம் ரூ. 81 ஆயிரம்...
  5. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஆரணி
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
  8. திருவண்ணாமலை
    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட...
  9. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா