/* */

முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி

தஞ்சையில் முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி பற்றிய காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.

HIGHLIGHTS

முக்காலி போட்டு அமர்ந்து, பொறுமையாக சைக்கிளை திருடி சென்ற ஆசாமி
X
சைக்கிள் திருடுவதற்கு முக்காலியுடன் வந்த ஆசாமி.

தஞ்சாவூர் ராஜகோபால்சாமி கோவில் தெருவில், தனியார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு எதிரே மாணவர்கள் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கும் சைக்கிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, வெள்ளை சட்டை, காவி வேட்டி, கையில் முக்காலியுடன் வரும் மர்ம நபர், ஒரு முறை நோட்டமிட்டு பிறகு, மீண்டும் வாசலில் முக்காலி போட்டு சில நிமிடங்கள் அமர்ந்து சாலையில் வேவு பார்த்துள்ளார்.

அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், சொந்த சைக்கிளை நிறுத்தி வைத்து எடுத்து செல்வது போல் சைக்கிளை திருடி சென்றுள்ளார். இவை அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த பகுதியில் மட்டும் ஒரே வாரத்தில் 15 சைக்கிள் திருட்டு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ பதிவுகளின் அடிப்படையில் போலீசார் மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

Updated On: 5 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து