/* */

உழைப்புக்கு ஊதியம்- பொங்கல் போனஸ் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

உழைப்புக்கு ஊதியம்- பொங்கல் போனஸ் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்
X

பட்டுக்கோட்டையில் நூதனப் போராட்டத்தில் தூய்மைப்பணியாளர்கள் 

பட்டுக்கோட்டை நகராட்சியில்பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறி 100க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் சுய உதவிக்குழு மூலம் இயங்கி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு, இதுநாள் வரை சம்பளம் தரவில்லை. மேலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு EPF வருங்கால வைப்புத்தொகையையும் நகராட்சி நிர்வாகம் இதுநாள் வரை செலுத்தாமல் வஞ்சித்து வருகிறது. இதனால் தங்களுடைய உழைப்புக்கு ஊதியம் மற்றும் பொங்கல் போனஸ் வழங்க மறுக்கும் பட்டுக்கோட்டை நகராட்சியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுப்போம் என தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வம் தெரிவித்தார்.

Updated On: 13 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?