/* */

தஞ்சை அருகே பொங்கல் விளையாட்டு போட்டியை போலீசார் தடுத்ததால் சாலை மறியல்

தஞ்சை அருகே பொங்கல் விளையாட்டு போட்டியை போலீசார் தடுத்ததால் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே பொங்கல் விளையாட்டு போட்டியை போலீசார் தடுத்ததால் சாலை மறியல்
X

பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சஞ்சய் நகர் கிராமத்தில் பொதுமக்கள் விளையாட்டு விழா ஏற்பாடு செய்து, அதன்படி விளையாட்டு விழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி விளையாட்டுவிழா எப்படி நடத்தினீர்கள் என்று விளையாட்டு விழா நடத்தவிடாமல் தடுத்தனர்.

மேலும் போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் தஞ்சை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. திடீரென தஞ்சை சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

Updated On: 16 Jan 2022 8:02 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?