/* */

பட்டுக்கோட்டையில் கன மழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த ஒரே நாள் மழையில் பெரும்பாலான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

HIGHLIGHTS

பட்டுக்கோட்டையில் கன மழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
X

பட்டுக்கோட்டையில் நேற்று பெய்த கன மழையில் அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது.

பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த ஒரே நாள் மழையில் பெரும்பாலான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பணிகள் பாதிப்பு.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் கனமழை தொடர்ந்து பெய்ததால், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில், நைனாங்குளம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதேபோல மழவேனிற்காடு கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அத்தோடு அதிராம்பட்டினம் பகுதியில் பெய்த கன மழையினால் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடற்கரை காவல் நிலையம் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் ஆகியவற்றை மழைநீர் சூழ்ந்தது. சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்குள் மழைநீர் உட்புகுந்த தால் காவல் நிலையப் பணிகள் பாதிப்படைந்துள்ளது.. இதேபோல அதிராம்பட்டினம் பகுதியில் பிலால் நகர்,ஹாஜா நகர், முத்தம்மாள் தெரு, பழஞ்செட்டித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மறவக்காடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்குள் மழை நீர் புகுந்துள்ளது இதனால் அறுவடை தருவாயில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

Updated On: 2 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...