/* */

சமீபத்தில் பெய்த கனமழையால் தஞ்சை மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மஞ்சள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

சமீபத்தில் பெய்த கனமழையால் தஞ்சை மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் பாதிப்பு
X

மஞ்சள் கிழங்கை காட்டும் விவசாயி.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, சாலியமங்கலம், மெலட்டூர் ஆகிய பகுதிகளில் மஞ்சள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பாபநாசம் முன்னோடி விவசாயி சாமு.தர்மராஜன் கூறியதாவது:-

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மகசூல் மிகவும் குறைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு சில தினங்களே உள்ளதால் அறுவடை செய்ய ஆரம்பிக்கப்பட்டது. பயிர்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை. மேலும் மஞ்சள் கிழங்குகளும் நல்ல மகசூல் காணவில்லை. போதுமான விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள், தோட்டக்கலை பயிர்களான வாழை, மஞ்சள் போன்ற பயிர்களும் எங்களுக்கு போதுமான விளைச்சலை தரவில்லை. ஆகவே தமிழக அரசு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அப்போதுதான் மறுசுழற்சி ஆக நாங்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Updated On: 11 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி