Begin typing your search above and press return to search.
பாபநாசம் பேரூராட்சியில் மாமியார்-மருமகள் போட்டி
பாபநாசம் பேரூராட்சியில் மாமியார், மருமகள் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் மாமியார், மருமகள் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாபநாசம் பேரூராட்சியில் 10- வது வார்டில் ரேகா சதீஷ்குமார், அதிமுக சார்பில் போட்டியிட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தரேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர் அதிமுகவில் 10- வது வார்டு செயலாளராக இருந்து வருகிறார்.இவருடைய மாமியார் விஜயாள் 1-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் போட்டியிட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் இக்கட்சியில் பாபநாசம் மாதர் சங்க ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.