/* */

தேசிய மக்கள் நீதிமன்றம்வழக்கு விசாரணை: சட்ட பணிகள் குழு தலைவர் பங்கேற்பு

இக்கூட்டத்தில், 11.09.2021 அன்று நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தேசிய மக்கள் நீதிமன்றம்வழக்கு விசாரணை: சட்ட பணிகள் குழு தலைவர் பங்கேற்பு
X

பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவரும், வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான சிவகுமார் தலைமையில் பாபநாசம் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட காவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 11.09.2021 அன்று நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பாகவும், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை நீதிமன்றம் மூலம் விரைந்து முடிப்பதற்கும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், காவல் நிலையத்தில் உள்ள முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றம் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் எதிரிகளுக்கு விதிக்கப்பட்ட பிடி கட்டளையை நிறைவேற்றுவது.

இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதன் மூலம் திருட்டு வழக்குகளை தடுப்பது, பள்ளி கல்லூரிகள் தொடங்குவது மற்றும் முடிவடையும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வது, மணல் திருட்டை தடுப்பது, கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் பழுதடைந்த கேமராக்களை சரிசெய்வது, அரசு அனுமதியின்றி மதுபானங்களை விற்பதை தடை செய்வது, குற்ற தடயப் பொருட்களை பாதுகாப்பாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பது ஆகியவற்றில் துரிதமாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சுதா, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்த், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஜெகதீசன், பாபநாசம் காவல் ஆய்வாளர் அழகம்மாள், உதவிஆய்வாளர் இளமாறன், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் செந்தில் குமரன், இருப்பு பாதை உதவிகாவல் ஆய்வாளர் லோகநாதன், இருப்புப்பாதை காவலர் பிரபு, அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சரோஜினி, பாபநாசம்நீதிமன்ற காவலர்கள் செந்தில், பிரியா, சிவனேசன், நீதிமன்ற தலைமை எழுத்தர் மஞ்சுளா, எழுத்தர் கலைச்செல்வி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உடன் இருந்தனர். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.



Updated On: 23 Aug 2021 4:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி