/* */

தொடர் மழை: தஞ்சை மாவட்டத்தில் பரவலாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1000- க்கும் மேற்பட்ட ஏக்கர் பாதிக்கப்பட்டன

HIGHLIGHTS

தொடர் மழை: தஞ்சை மாவட்டத்தில் பரவலாக நெற்பயிர்கள்  நீரில் மூழ்கி பாதிப்பு
X

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில்  ஆயிரக்கணக்கான  நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன

தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. அரசு முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாபேட்டை, வாளமர்கோட்டை, கழுமங்கலம், அல்லூர், அம்மையகரம், ஐம்பது மேல் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கழுமங்கலம் ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் 50 மேல் நகரத்தில் முறையாக வாய்க்கால் தூர்வராததால் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைந்து அதிகாரிகள் தூர்வாரும் பணியை செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களைக் முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ள நிலையில், தற்பொழுது பயிர்கள் முழுவதும் வீணாகி உள்ளதாகவும், மறு நடவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Updated On: 18 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு