/* */

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி உயிரிழப்பு

குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில், தாளடி சாகுபடிக்காக தனது வயல்வெளிகளை சரிசெய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வந்தார்

HIGHLIGHTS

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி   உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி ஜெயராமன்

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன்( 62.) இவர் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது வயலை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகிறார். தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில், தாளடி சாகுபடிக்காக தனது வயல்வெளிகளை சரிசெய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களாக இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய மழை கடந்த பெய்து வருகிறது. அவரது வயலில் தாழ்வாக சென்ற மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல், மின் வயரை மிதித்ததால் விவசாயி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?