/* */

கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்

முன் களப்பணியாளர்கள் 700 நபர்களுக்கு 3 லட்சம் மதிப்பீட்டில் வேட்டி சேலை, 2 நபர்களுக்கு தையல் மிஷினும் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்
X

கும்பகோணத்தில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட இளைஞரணி சார்பில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சியில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் வரவேற்றார். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் முன் களப்பணியாளர்கள் 700 நபர்களுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேட்டி சேலையும், இரண்டு நபர்களுக்கு தையல் இயந்திரத்தையும் வழங்கினர்.

குடந்தை நகர செயலாளர் தமிழழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜா, அருண்மொழி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு வாழ்த்துரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அசோக்குமார், அண்ணாதுரை, அம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெங்கடேசன் நன்றி கூறினார்.

Updated On: 26 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!