/* */

சுவாமிமலை கோவில் வாசலில் பக்தர்கள் தைப்பூச வழிபாடு

தைப்பூசத்தை முன்னிட்டு, சுவாமிமலை கோவில் வாசலில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

HIGHLIGHTS

சுவாமிமலை கோவில் வாசலில் பக்தர்கள் தைப்பூச வழிபாடு
X

கோவில் வாசலில் தீபமேற்றி வழிபட்ட பக்தர்கள். 

முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசித்து செல்வர். பலர், காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருவர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் தைப்பூசத்திற்கு முருகர் கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி, சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்தனர். பலர் பாத யாத்திரையாக வந்திருந்தனர். கோவில் மூடப்பட்டிருந்ததால் வாசல் முன்பு தீபங்கள் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தங்களது நேர்த்திகடனையும் செலுத்தினர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Updated On: 19 Jan 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?