Begin typing your search above and press return to search.
கும்பகோணம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் தூக்கில் தொங்கிய ஏட்டு மாமியார்
கும்பகோணம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் போலீஸ் ஏட்டுவின் மாமியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள போலீசார் குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் சுமா. இவர் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மாமியார் செல்வி (60). சுமாவுடன் வசித்து வந்த செல்வி நேற்று முன்தினம் இரவு தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருமரத்தில் செல்வி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வி உடலை கைப்பற்றி கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வி எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.