/* */

கும்பகோணம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் தூக்கில் தொங்கிய ஏட்டு மாமியார்

கும்பகோணம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் போலீஸ் ஏட்டுவின் மாமியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கும்பகோணம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் தூக்கில் தொங்கிய ஏட்டு மாமியார்
X

தற்கொலை செய்து கொண்ட  செல்வியின் உடல்.

கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள போலீசார் குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் சுமா. இவர் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மாமியார் செல்வி (60). சுமாவுடன் வசித்து வந்த செல்வி நேற்று முன்தினம் இரவு தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருமரத்தில் செல்வி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வி உடலை கைப்பற்றி கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வி எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 27 May 2022 2:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்