/* */

கும்பகோணம் அருகே அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலி

கும்பகோணம் அருகே மானம்பாடியில் அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலி.

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலி
X

சென்னையிலிருந்து மன்னார்குடியை நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. கும்பகோணத்தை அடுத்த மானம்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்துக்கு முன்பு பாலாக்குடியை சேர்ந்த பாலு (60), சைக்கிளில் திடீரென வலது புறமாக திருப்ப முயன்றார். இதனை அறிந்த அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் விபத்து ஏற்படாமல் இருக்க பேருந்தை திருப்பும் போது, நிலைதடுமாறி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, அருகில் உள்ள குளத்தின் கரையில் பேருந்தை நிறுத்தினார். இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த திருவாய்பாடியை சேர்ந்த நாகராஜன் மகன் சக்திவேல் (30) பலத்த காயமடைந்தார். பின்னால் அமர்ந்து வந்த திருவாய்ப்பாடியை சேர்ந்த செல்வம் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சக்திவேலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், பாலுவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதுகுறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 9 April 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  2. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  4. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  5. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  6. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  8. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  9. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  10. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...