/* */

மண்புழு உரம் உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில்நுட்பம் வடிவமைப்பு..!

மண்புழு உரம் உற்பத்தியை அதிகப்படுத்த, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

HIGHLIGHTS

மண்புழு உரம் உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில்நுட்பம் வடிவமைப்பு..!
X

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் முகமதுபாசித், அன்புசெல்வன், ஹரிஹரன், கார்த்திக் ஆகியோர் இணைந்து பேராசிரியர் சரண்யாவின் வழிகாட்டுதலின்படி மண்புழு உரம் உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

அதன்படி இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் மண்புழு உரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதை மனதில் கொண்டு மண்புழு உற்பத்தியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட இந்த சாதனமானது, மண் புழுவை அதன் வளர்ச்சிக்கு தேவையான தட்பவெப்ப நிலையை பராமரித்து வளர்க்கும்போது அதிகளவில் மண்புழு உரம் உற்பத்தி செய்ய முடியும்.

இதற்கேற்றவாறு புதிய சாதனத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த புதிய கருவியை வேளாண்மைப் பொறியியல் துறை உதவி பொறியாளர் ரவிகிருஷ்ணன் பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், இக்கருவியானது இயற்கை உர உற்பத்தியில்விவசாயிகளுக்கு மிக முக்கிய பங்கு ஆற்றும் என்றார். கல்லூரி நிறுவன தலைவர் திருநாவுக்கரசு, ஆலோசகர் கோதண்டபாணி, முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன், துறைத தலைவர் (பொ) சந்திரசேகரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 18 Jun 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!