/* */

கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நேரில் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுமார் 100 பேருக்கு நகர் நல அலுவலர் பிரேமா நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினார்

HIGHLIGHTS

கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நேரில்  தடுப்பூசி
X

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத  நபர்களுக்கு  நகர் நல அலுவலர் பிரேமா நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினார்

தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இருப்பினும் ஒருசிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள பெரிய வியாபார நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்பது குறித்து நகராட்சி சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரு சிலர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நகர்நல அலுவலர் பிரேமா, கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள வியாபார நிறுவனங்களில் நேரில் சென்று அந்த நிறுவனங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். அந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது குறித்து, நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில், கொரோனா நோய் பரவல் தற்போது கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் அதன் 3வது அலையின் தாக்கம் விரைவில் வரக்கூடும். எனவே அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நகரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் வழங்கப்பட உள்ளது. பொது மக்கள் எந்தவித பயமுமின்றி கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும். தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர தயங்காமல் நகர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.

Updated On: 19 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!