/* */

கும்பகோணத்தில் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடையடைப்பு நடத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள். 

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், பட்டு நெசவுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டு சேலை நெய்வதற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்து, தறியில் நெய்து சேலைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

பட்டுச்சேலை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான, கோரா பட்டின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கோரா பட்டின் விலை ரூ.3 ஆயிரத்து 200-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.

கடுமையான விலை உயர்வினால் இந்த தொழிலை நம்பியுள்ள நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் கோரா பட்டின் விலை உயர்வை குறைத்து நெசவுத்தொழிலை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் பகுதியில் உள்ள பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் அமைப்புகள் சார்பில், நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில், கும்பகோணம் மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வம், அனந்தராமன் மற்றும் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 12 May 2022 12:15 AM GMT

Related News