/* */

கும்பகோணம் மாநகராட்சியில் 275 பேர் போட்டி

கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 275 பேர் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

கும்பகோணம் மாநகராட்சியில் 275 பேர் போட்டி
X

கும்பகோணம் மாநகராட்சியில், மொத்தமுள்ள 48 வார்டுகளில் 28-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 445 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் வேட்புமனு பரிசீலனையின் போது பல்வேறு காரணங்களால் 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாள் என்பதால், 113 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

இதில் 48 வார்டுகளிலும் மொத்தம் 275 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்குரிய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்கள் ஆகியவற்றை நேற்று மாலை தேர்தல் அதிகாரிகள் அறிவித்து, அறிவிப்பு பலகையில் ஒட்டினர்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 189 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 1 மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று 54 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். தற்போது 134 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், 172 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று 49 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து தற்போது 121 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Updated On: 8 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை